அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 60
ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு
அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை தொடர்ந்தும் 60 வயதாக பேணப்படும் என்று ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், ஓய்வுபெற்ற இந்த ஊழியர்களின் சேவைகளை 67 வயது வரை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
அரச நிர்வாக சுற்று நிரூப இலக்கம் மூன்றின் கீழ் 2018 இற்கு அமைய இந்த விதிமுறைகள் அமுலுக்கு வருவதாக ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment