ஆனந்த அளுத்கமகேயின் எதிர்ப்பு போராட்டம்

முடிவுக்கு வந்தது!

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.ரி.எம். முத்தாலிப் அவர்களின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எம்.ரி.எம். முத்தாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன்  நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து பொலிஸ் ஆணைக்குழுவின் முடிவு கிடைக்கும் வரை தான் விடுமுறையில் செல்வதாக அதிகாரி தெரிவித்ததை அடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகைவிடப்பட்டது.
பொலிஸ் நிலையத்தின் முன்னாள் இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் ஆனந்த அளுத்கமகே  போராட்டத்தினை முன்னெத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top