தமிழக முதல்வராக ஜெயலலிதா
5-வது முறையாக இன்று பதவியேற்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா 5-வது முறையாக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கிய 27 நிமிடங்களில் நடந்து முடிந்தது.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி ப.மோகன், ப.வளர்மதி உள்ளிட்ட 28 அமைச்சர்களும் இரண்டு பகுதிகளாக இருந்து பதவியேற்றனர்.
முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து, கடந்த 11-ம் திகதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின. இதனால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தில் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா நேற்று ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கத்து.














0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top