ஓய்வு பெறவேண்டிய நிலையில்
தேர்தல்கள் ஆணையாளர்
தேர்தல்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதியுடன்
60 வயதை பூர்த்தி
செய்வதோடு, அவரது பதவியில் இருந்தும் ஓய்வு
பெறவேண்டிய நிலையில் உள்ளார்.
அவர்
தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க விரும்பினால் முன்னரே
அதற்கான கோரிக்கையை
முன்வைத்திருக்க வேண்டும். எனினும், அவர் இதுவரை
அவர் பதவியில்
நீடிக்க வேண்டும்
என்று எவ்வித
கோரிக்கையும் முன்வைக்கவில்லை என அவருக்கு நெருக்கமான
வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட 19ஆவது திருத்தச்
சட்டத்துக்கமையச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுயாதீனத் தேர்தல்
ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட
பின்னர் தேர்தல்
ஆணையாளரின் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவின்
கீழ் வரவுள்ளது. சுயாதீனத்
தேர்தல் ஆணைக்குழு
ஆரம்பிக்கப் படவுள்ளதாலேயே தேர்தல் ஆணையாளர் பதவிக்
காலத்தை நீடிக்க
வேண்டும் எனக்
கோரிக்கை விடுக்கவில்லை
எனத் தேர்தல்
ஆணையாளர் அலுவலக
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும்
19ஆவது திருத்தச்
சட்டத்துக்கமைய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது
பதவிக் காலத்தை
65 வயது வரை
நீடித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.