பிரித்தானியாவிற்கு
மேலும் ஒரு இளவரசி
பிரித்தானிய
இளவரசி கேத்
ஈ மிடில்டன் பெண் குழந்தையொன்றை
பிரசவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய
இளவரசர் வில்லியம்
மற்றும் இளவரசி
கேத் ஈ
மிடில்டன் தம்பதியினரின்
இரண்டாவது குழந்தை இதுவாகும்.
இங்கிலாந்து
இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின்
மூத்த மகன்
இளவரசர் வில்லியம்
(வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்
படித்தபோது, கேத் மிடில்டனை (33) சந்தித்தார். இருவரும்
காதலித்து, 2011–ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்
29ஆம் திகதி
திருமணம் செய்து
கொண்டனர்.
இந்த
தம்பதியருக்கு கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை
மாதம் 22ஆம் திகதி முதலில்
ஆண் குழந்தை
பிறந்தது. அந்த
ஆண் குழந்தை
இளவரசர் ஜார்ஜ்
என்ற பெயரில்
வளர்ந்து வருகிற
நிலையில், இளவரசி
கேத் மிடில்டன்
மீண்டும் கர்ப்பம்
அடைந்தார்.
அந்தநாட்டு
நேரப்படி நேற்று காலை 08.34 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 1.04 மணி) லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில்
இடம்பெற்றுள்ளது. பிறந்துள்ள
பெண் குழந்தை
3.7 கிலோ நிறையுடையது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயும்
சேயும் நலமாக
இருப்பதாக வைத்தியசாலைத்தகவல்கள்
தெரிவிக்கின்றன. பிரித்தானிய
முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண்
குழந்தை நான்காவது
இடத்தில் உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.