பாகிஸ்தான் வழங்கிய உதவிகளுக்கு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவிப்பு

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி முழுத்தேசமும் நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உங்களின் உதவிகளின் காரணமாக இன்று இலங்கை ஒரு அமைதியான ஒற்றையாட்சி நாடாக உள்ளதுஎன ஜனாதிபதி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் புதிய உயரிஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செய்யித் சகீல் ஹூசைன் அவர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தனது நியமனக்கடிதத்தை கையளித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச மன்றங்களில் பொதுவாகவும் குறிப்பாக . நா. மனித உரிமைகள் பேரவையிலும் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
ஜெனீவாவிலுள்ள உங்கள் நாட்டுத்தூதுவர் தனது நாட்டுக்காக போராடுவதுபோன்று எமக்காக போராடினார்எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தக்சிலாபோன்ற பௌத்த பகுதிகளின் அபிவிருத்திக்கும் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் தொல்பொருளியல் நிபுணர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்குமாறு பாகிஸ்தான் தூதுவர் இலங்கையிலுடம் கேட்டுக்கொண்டார். அக்கோரிக்கையை ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மீதும் அவரது நிலையுறுதியான கொள்கைகள் மீதும் தனது அரசாங்கம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாக தெரிவித்த துஷுதுவர் ஹூசைன் இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் தாம் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top