மணமகளுக்கு தாலி கட்ட
முயன்ற சுப்ரமணியன் சுவாமி
திருமண மண்டபத்தில்
பரபரப்பு
(வீடியோ இணைப்பு)
திருமண
விழாவில் கலந்து
கொண்டு மணமக்களை
வாழ்த்த அழைக்கப்பட்டிருந்த
இந்திய பா.ஜ.க மூத்த தலைவர்
சுப்ரமணியன் சுவாமி, மணமகளுக்கு தாலி கட்ட
முயன்றதால், அங்கு சிறிது நேரம் பதற்றம்
ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
ஒரு
கோயிலில் நடைபெற்ற
திருமண விழாவுக்கு
வந்திருந்த பா.ஜ.க மூத்த தலைவர்
சுப்ரமணியன் சுவாமியிடம், குருக்கள் தாலியை வாழ்த்திக்
கொடுக்குமாறு கூறினார்.
சுப்ரமணியன்
சுவாமியும், தாலியை மிகுந்த பக்தியுடன் பெற்று
அதனை நெஞ்சில்
வைத்து பிரார்த்தித்தார்.
பிறகு தாலியை
மாப்பிள்ளையிடம் கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த
நிலையில், யாரும்
எதிர்பாராத வகையில், அதனை எதிரே நின்றிருந்த
மணமகளின் கழுத்தில்
கட்டச் சென்றார்.
இதனை
பார்த்த உறவினர்கள்
அப்படியே அதிர..
சுதாகரித்துக் கொண்ட சந்திரலேகா, சுப்ரமணியன் சுவாமியின்
கையைத் தட்டி,
மாப்பிள்ளையிடம் தாலியைக் கொடுக்குமாறு அதட்டினார்.
அப்போதுதான்
சூழ்நிலையை உணர்ந்தது போல் சுப்ரமணியன் சுவாமியும்
தாலியை மணமகனிடம்
கொடுத்தார். அப்பாடா என்று பெருமூச்சு விட்ட
மணமகன் தாலியை
வேகவேகமாக மணமகள்
கழுத்தில் கட்ட
கெட்டிமேளம் முழங்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்ட
உறவினர்களும், பூக்களைத் தூவி ஆசிர்வாதம் செய்தனர்.
சும்மா விளையாட்டுக்காக என்பது போல சுப்ரமணியன் சுவாமி முக பாவனையில் காட்ட, சந்திரலேகாவோ முறைத்தபடி இருந்தார்.
இந்த வீடியோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் யாருமே, முதலில் பதறுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
வீடியோ இணைப்பு
நன்றி : நியூஸ்7 தமிழ்
https://youtu.be/QBQStAlS2oQ
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.