கல்முனை ஸாஹிறா
தேசியக்கல்லூரியின்
கணிதபாட
சிரேஸ்ட ஆசிரியர் ஹம்ஸா
அகவை 60 இல் ஓய்வு பெற்றார்
கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் 4 தசாப்தங்களாக ஆசிரியராக, பகுதித்தலைவராக, உதவி அதிபராக, பிரதி அதிபராக, அதிபராக கடமையாற்றிய கணிதபாட சிரேஸ்ட ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹம்ஸா தனது
60வது அகவையில் ஓய்வுபெற்றார்.
1975 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில்
கணிதபாட ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் கணித பாடத்தில் பாண்டித்தியம்
பெற்றிருந்ததுடன் , அதிக
எண்ணிக்கையிலான மாணவர்கள் பொறியியல் , மருத்துவம் , கணக்கியல், கலை, சட்டம், மற்றும் அரச சேவையில் உயர் பதவிகள் பல உருவாவதற்கு காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.
தனது முதல் நியமனத்தை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய
கல்லூரியில் பெற்றுக் கொண்ட இவர் பின்னர் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியிலும்
கற்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.