பிலிப்பின்ஸ் ரப்பர் தொழிற்சாலை
தீவிபத்தில் 72 பேர்
பரிதாபகரமாக உயிரிழப்பு
பிலிப்பின்ஸில் ரப்பர் செருப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாகினர். இதுகுறித்து தேசிய காவல்துறைத் தலைவர் லியோனார்டோ எஸ்பினா கூறியபோது,
தீவிபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணிகளில் 72 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவர்களில் பலரது உடல்கள் முழுமையாக எரிந்து வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்துள்ளன.விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இது விபத்தாகவே இருந்தாலும், இத்தனை மரணங்களுக்கும் காரணமாவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.