இலங்கையில்
தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட
பாலியல் வன்முறை குறித்து
விசாரணை நடத்த வேண்டும்
- ஐ.நா செயலாளர்
பான் கீ மூன்
இலங்கையில்
நடந்த உள்நாட்டு
போரின் போது
இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்பட்ட தமிழ் பெண்கள் மீதான பாலியல்
வன்முறைகள் தொடர்பாக, இலங்கை அரசு விசாரணைகளை நடத்த
வேண்டும் என்று
ஐ.நா
செயலாளர் பான்
கீ மூன்
வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து
அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த
பின்
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மீள்குடியேற்றம்
உட்பட்ட பல்வேறு
முன்னேற்ற நடவடிக்கைகளை
அரசு மேற்கொண்டுள்ளது.
எனினும்
போரின் போது
அங்கு நடந்த
பாலியல் வன்முறை
குற்றங்கள் குறித்து அரசு உரிய விசாரணை
நடத்த தவறிவிட்டது. விடுதலைப்
புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் தமிழ்
பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல்
வன்முறைகள் குறித்து இலங்கையில் புதிதாக
பதவியேற்றுள்ள அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று
நடவடிக்கைகளை எடுக்கவும், போரின் போது கணவனை
இழந்த பெண்களின்
குடும்ப பொருளாதார
முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை
வழங்க வேண்டும்
என்றும் பான்
கீ மூன்
வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.