இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்

ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில்

தலைவர் ஜெமீல் அவர்களால் திறப்பு

(மருதூர் ஜஹான்)

அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக   இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது( 09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான   கலாநிதி . எம். ஜெமீல் அவர்களால் நேற்று 7ஆம் திகதி திங்கள் கிழமை (07.08.2017) காலை 9.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இது இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியினை கலாநிதி .எம். ஜெமீல் அவர்கள்  பொறுப்பேற்றதன் பிற்பாடு ஒன்றரை வருடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது கிளை என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top