கட்டுநாயக்க
விமான நிலையத்தின்
குப்பை வாளிக்குள் இருந்து
28 தங்க பிஸ்கட்கள் மீட்பு
கட்டுநாயக்க
விமான நிலையத்தின்
குப்பை வாளியில்
இருந்து, நேற்று
(20) இரவு 11 மணியளவில், சுமார் 19 மில்லியன் ரூபாய்க்கும்
அதிக பெறுமதியுடைய
ஒரு தொகை
தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான
நிலையத்தில் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையத்
தொகுதியை சுத்தம்
செய்யும் ஊழியர்
ஒருவரால், சந்தேகத்துக்கிடமான
பொதி ஒன்று
இருப்பதாக தகவல்
வழங்கப்பட்டதையடுத்தே. இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது,116
கிராம் நிறையுடைய
28 தங்க பிஸ்கட்கள்
இதன்போது கைப்பற்றப்பட்டதாக,
சுங்கப் பிரிவினர்
தெரிவித்தனர்.
அவற்றின்
பெறுமதி சுமார்
ஒரு கோடியே
95 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று விமான
நிலைய சுங்கப்
பிரிவினர் கூறியுள்ளனர்.
சம்பவம்
தொடர்பில் விமான
நிலைய சுங்கப்
பிரிவினர் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.