வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக
விரிவுரையாளர்களிடமிருந்து 813 மில்லியன் ரூபா
அறவிட நடவடிக்கை
பட்டப்பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கையில் 486 பேரினது விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்ததுடன் வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து 813 மில்லியன் ரூபாய் அறவிடவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட விதிகளுக்கு அமைவாக இந்த அறவீடு மேற்கொள்ளப்படும்; இத்தொகை எமது பல்லைக்கழகங்களுக்கு உரித்தானது. இது தொடர்பில் சில விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ள சிலருக்கு எதிராக தற்போது வழக்கு தொடரப்படவுள்ளது என்றும் உயர்கல்வி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.