அளுத்கம
தர்காநகர் மோதல் சம்பவம்
பாதிக்கப்பட்டவர்களுக்கானஇழப்பீடுகள்
நாளை
2014 ஆம் ஆண்டு அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற
மோதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான
இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு அளுத்கம தர்கா நகரிலுள்ள ஸாஹிரா
கல்லுரியில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித
சேனாரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது 122 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு 188 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான
ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.
சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் மற்றுமொரு உறுதிமொழியின்
அடிப்படையில் இந்த இழப்பீடு வழங்கப்படுவதாக அமைச்சரும் அமைச்சரவை
துணைப்பேச்சாளரும் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.