மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு
தயாராகி வரும்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்


மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று கூடவுள்ள சங்கத்தின் மத்தியக்குழு கூட்டத்தின்போது, அது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் கோரிக்கை மற்றும் யோசனைகள் அடங்கிய முன்வைப்பொன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இதுவரை அரசாங்கம் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்காரணமாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மத்தியக்குழுவின் ஊடாக, பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top