மெக்சிகோவில் மீண்டும் ஒரு பத்திரிகையாளர்
சுட்டுக் கொலை
மெக்சிகோ
நாட்டில் பத்திரிகையாளர்களை
குறிவைத்து மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல்
நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ
நாட்டின் கான்கன்
நகரில் உள்ள
குயிண்டானா ரூ என்ற பகுதியில் அமைந்துள்ள
ரிசார்ட்டில் தங்கி இருந்தவர் ரூபன் பாட்.
இவர் அதே
பகுதியில் இணைய
தள பத்திரிகையை
நடத்தி வந்தார்.
இந்நிலையில்,
ரூபன் பாட்
நேற்று ரிசார்ட்டில்
தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம
நபர்கள் தாங்கள்
கொண்டு வந்த
துப்பாக்கியல் ரூபனை சரமாரியாக சுட்டனர்.
இந்த
துப்பாக்கி சூட்டில் ரூபன் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக பலியானார்.
கடந்த ஒரு
மாத காலத்தில்
பத்திரிகையாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல்
இதுவாகும். ஏற்கனவே ரூபன் பாட்டுக்கு கொலை
மிரட்டல்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.