ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில்
சீனாவின் தேசிய கீதம்
முதலில் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள்
பொலன்னறுவையில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில்
முதலில் சீனாவின்
தேசிய கீதம்
பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அரசாங்க
நிகழ்வுகளில் முதலில் இலங்கையின் தேசிய கீதம்
பாடப்படுவது வழக்கம். அதன் பின்னரே, ஏனைய
நாட்டின் தேசிய
கீதம் பாடப்படும்.
எனினும்,
கடந்த சனிக்கிழமை
பொலன்னறுவவில், நடந்த நிகழ்வு ஒன்றில் இந்த
நடைமுறைக்கு மாறான வகையில், முதலில் சீனாவின்
தேசிய கீதம்
பாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பங்கேற்ற நிகழ்விலேயே
இவ்வாறான சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
சீனாவின்
உதவியுடன், அமைக்கப்படவுள்ள 200 படுக்கைகளைக்
கொண்ட சிறுநீரக
நோய் சிகிச்சைக்கான
சிறப்பு மருத்துவமனைக்கு
அடிக்கல் நாட்டும்
நிகழ்விலேயே சீனாவின் தேசிய கீதத்துக்கு முதலிடம்
கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
பங்கேற்ற நிகழ்வில்
இவ்வாறான சம்பவம்
இடம்பெற்றிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.