கிளிநொச்சி, இரத்தினபுரி நீதிமன்றங்களுக்கு
புதிதாக கட்டிடத் தொகுதிகள்
இரத்தினபுரி
மற்றும் கிளிநொச்சி
நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டிடத்
தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
இரத்தினபுரி
மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் நிலவும் இட
நெருக்கடியினால் அங்கு தற்பொழுது உள்ள கட்டிடத்திலான
சேவை தன்மை
மற்றும் மண்சரிவு
அனர்த்தத்தின் காரணமாக இரத்தினபுரி நீதிமன்ற கட்டிட
தொகுதியின் நிர்மாண பணிகளை துரிதமாக மேற்கொள்வதில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதே
போன்று கிளிநொச்சி
நீதிமன்ற கட்டிட
தொகுதியையும் போதுமான அடிப்படை வசதிகளுடன் விரிவு
படுத்த வேண்டும்
என்பது அடையாளம்
காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக
இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி நீதி மன்ற
கட்டிட தொகுதிகளை
நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை பொறியியலாளர்
பணிகள் தொடர்பான
மத்திய ஆலோசனை
பிரிவிற்கு வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.