பப்புவா நியூ கினியாவில் விமான விபத்து
12 பேர் மரணம்
பப்புவா
நியூ கினியாவில்
சிறிய வகை
விமானம் விழுந்து
நொறுங்கியதில், அதிலிருந்த 12 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து
பொலிலார்
கூறியிருப்பதாவது:
ஒக்ஸாப்மின்
பகுதியிலிருந்து புறப்பட்ட விமானம், கியுங்கா விமான
தளம் அருகே
விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில்,
விமானி உட்பட 12 பேர்
உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும்
அடங்குவர் என்று
தெரிவித்துள்ளனர்.
நடுவானில்
விமானத்தின் என்ஜின் செயலிழந்ததால், அந்த விமானம்
விழுந்து நொறுங்கியதாகக்
கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த விமானி, ஆஸ்திரேலியாவைச்
சேர்ந்தவர் என்று ஊடகங்கள் தெரிவித்தன. இந்த
விமான விபத்தில்
ஆஸ்திரேலியர் உயிரிழந்ததை, அந்த நாட்டு வெளியுறவுத்
துறை அமைச்சகம்
உறுதி செய்திருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.