குழந்தைகளுக்கு
வீட்டில்
சொல்லி கொடுக்க வேண்டியவை
குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு
பெற்றோர்களாகிய எம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில்
நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது.
குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம்
குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.
குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகளில் சில இதோ….
* எந்த வயது
குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தவும்
கூடாது.
* சிறு சிறு
வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.
* குழந்தைகள்
எதிரில் பெரியவர்களாகிய நாம் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப்
பாதிக்கும்.
* எந்தக்
குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள்
மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் எதிர்காலத்தில் விதைத்து விடும்.
* குழந்தைகள்
எதிரில் நாம் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.
* எல்லோருடைய நல்ல
குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். குழந்தைகளை அருகில் வைத்துக்
கொண்டு யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.
* குழந்தைகளுக்கும்
விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.
* பிள்ளைகளின்
வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப்
பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.
* குழந்தைகளுக்கு
உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.
* ஆபத்தை
விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக்
கூடாது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.