கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
34 வது புதிய பொலிஸ் மா அதிபர்
இலங்கையின் 34 வது பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர இன்று மாலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவரது மனைவி , மகன், மகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரசியலமைப்புச் சபையின் பெரும்பான்மையான வாக்குகளின் பிரகாரம் கடந்த திங்கட்கிழமை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பூஜித் ஜயசுந்தரவின் பெயர் ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று காலை அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார். இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
புதிய பொலிஸ் மா அதிபர் பதவியைப் பொறுப்பெடுத்துள்ளதன் மூலம் இலங்கையின் பொலிஸ் துறை வரலாற்றில் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட முதலாவது பொலிஸ் மா அதிபர் என்ற பெயர் இவருக்குக் கிடைத்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.