புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர நியமனம்
புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று 20 ஆம் திகதி நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கி வைக்கபட்டுள்ளது.
வெற்றிடமாகக் காணப்பட்ட பொலிஸ் மா அதிபர் பதிவிக்காக ஜனாதிபதி அவர்களினால் அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
அரசியலமைப்பு சபையினால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இன்று இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.