அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
அமெரிக்காவின்
சின்சினாட்டி நகருக்கு கிழக்கே உள்ள அப்பலச்சியான்
பகுதியில் ஒரு
வீட்டுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்
உட்பட ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
3 வீடுகளில்
7 உடல்களும், தனியாக ஒரு வீட்டில் ஒருவரும்
தலையில் சுடப்பட்ட
நிலையில் உயிரிழந்து
கிடந்தனர். இதில் ஒரு பெண் குழந்தை
பெற்று 4 நாட்களே
ஆன நிலையில்
கொல்லப்பட்டுள்ளது.
பிறந்த
4 நாட்களே ஆன
சிசுவும், 6 மாதக் குழந்தையும், 3 வயது குழந்தை
ஒன்றும் துப்பாக்கிச்
சூட்டில் இருந்து
தப்பியுள்ளன.
முதல்
துப்பாக்கிச் சூட்டுக்கும் 4வது துப்பாக்கிச் சூடு
நடந்த இடமும்
சுமார் 50 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது.
கொல்லப்பட்டவர்கள்
பலரும், உறக்கத்தில்
இருக்கும்போது கொல்லப்பட்டுள்ளனர்.
இதில்
ஒரே குற்றவாளி
அல்லது ஒன்றுக்கும்
மேற்பட்ட குற்றவாளிகள்
ஈடுபட்டிருக்கலாம் என்றும், குடும்ப
உறுப்பினர் ஒருவர்தான் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற கோணத்திலும் விசாரணை
நடந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள்
செய்திகளை வெளியிட்டிருக்கின்றன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.