நார்வே : நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து
13 பேர் பலி
நார்வேயில்
ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த
நாட்டின் மேற்குக்
கடலோரப் பகுதியில்
அந்த ஹெலிகாப்டர்
வெடித்துச் சிதறி கடலுக்குள் விழுந்ததாக சம்பவத்தை
நேரில் பார்த்தவர்கள்
தெரிவித்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்
15 பேர் முதல்
17 பேர் வரை
இருந்ததாக அந்த
நாட்டு ஊடகங்கள்
தெரிவித்தன. ஹெலிகாப்டரில் இருந்த சிலர் மீட்கப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.
நடுக்கடலில்
உள்ள எண்ணெய்க்
கிணற்றில் பணியாற்றி
வந்த ஊழியர்கள்
அந்த ஹெலிகாப்டரில்
இருந்ததாக ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.