அனுராதபுரம் துப்பாக்கி சூட்டில்
பலியான மூவர் விபரம் !
அனுராதபுரம்
- திரப்பனை பகுதியில், நேற்று துப்பாக்கி சூட்டுக்
காயங்களுடன் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட
மூன்று பேர்களின்
தகவல்கள் தெரியவந்துள்ளன.
சடலங்களாக
மீட்கப்பட்டவர்களில், ஒருவர் நொச்சியாகமை பிரதேசத்தினைச் சேர்ந்த
சரத்
பண்டார
அல்லது
எஸ்.
எப்
பண்டார
ஆவார்.
இரண்டாம்
நபர்,
நொச்சியாகம
பிரதேசத்தினைச்
சேர்ந்த
24 வயதுடைய
குமார
என அடையாளம்
காணப்பட்டுள்ளது.
கொலை
செய்யப்பட்ட மூன்றாம் நபர், காலி
- ஹிங்தொட
பிரதேசத்தினை
சேர்ந்த
மகிந்த
கமகே
பிரதீப்
குமார
எனும் 30 வயதுடையவர்
என தெரியவந்துள்ளது.
கொலை
செய்யப்பட்டுள்ள மூவரும் பயணித்த கார் வாடகைக்கு
பெறப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர்
கிலிஒய பிரதேசத்தைச்
சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.
பொலிஸாருக்கு
கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள்
மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவ
இடத்திற்கு சென்று பார்வையிடும் போதும் கார்
இயங்கிக் கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
குறித்த
கார் பாதையை
விட்டு விலகி
விபத்துக்குள்ளாகி காணப்பட்டதுடன், காரின்
முன்பக்க மற்றும்
பின்பக்க கண்ணாடிகள்
சேதமடைந்து காணப்பட்டதாகவும், குறித்த கார் வடமத்திய
மாகணத்தில் பதிவு செய்யப்பட்ட கார் என்றும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.