சாய்ந்தமருதுக்கு விஜயம்
செய்த தபால் சேவைகள் அமைச்சரிடம்
தபால் நிலைய
கட்டடத்தின் அவல நிலையைக் கூறி
பொன்னாடை போர்த்தியவர்கள் நிவாரணம்
பெற முயற்சித்தார்களா?
மக்கள் கேள்வி
சாய்ந்தமருதுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் அவர்களுக்கு
சாய்ந்தமருது தபால் நிலைய கட்டடத்தின் அவல நிலையை சாய்ந்தமருதில் உள்ள பிரமுகர்கள், பள்ளிவாசல் மரைக்காயர்மார்கள் எடுத்து விளக்கினார்களா?
இல்லை அமைச்சரை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார்களா? இது அந்த ஊர் மக்களால் எழுப்படும் கேள்வி.
இது இப்படியிருக்க, முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் அவர்களுக்கு மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா எதற்காக பொன்னாடை போர்த்துகின்றார்?இவர் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பாக அமைச்சருக்கு பொன்னாடை போர்த்துகின்றாரா? பள்ளிவாசல் சார்பாக அமைச்சருக்கு பொன்னாடை போர்த்துவதாக இருந்தால் அது பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா அவர்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை. இது மெளலவியின் தனிப்பட்ட போர்த்துதலா?
சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு அமைச்சர் செய்துள்ள சேவையைச் சுட்டிக்காட்டியா இந்த பொன்னாடை அணிவிப்பு? என்று மக்கள் வினவுகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.