கிழக்கு மாகாணப் பாடசாலைகளில்
புதிதாக 338  அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்!

புதிதாக 3779 அதிபர்கள் நாடுபூராகவும் விரைவில்நியமிக்கப்பட உள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நியமிக்கப்படவிருக்கும் அதிபர்களில்,
மேல் மாகாணத்தில் 760 அதிபர்களும்,
மத்திய மாகாணத்தில் 584 அதிபர்களும்,
தென் மாகாணத்தில் 532 அதிபர்களும்,
வடமேல் மாகாணத்தில் 427 அதிபர்களும்,
வடமத்திய மாகாணத்தில் 264 அதிபர்களும்,
சப்ரகமுவ மாகாணத்தில் 252 அதிபர்களும்,
வட மாகாணத்தில் 380 அதிபர்களும்,
கிழக்கு மாகாணத்தில் 338 அதிபர்களும்
என்ற அடிப்படையில் புதிதாக அதிபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தனர்.
இதில் 4079 பேர் நேர்முகத் தேர்விற்காக தகுதி பெற்றுக்கொண்டிருந்தனர்.
சுமார் 300 பேர் நேர்முகத் தேர்வின் போது அதிபராகும் தகுதியை பெற்றுக்கொள்ளவில்லை.

ஏனைய 3779 பேர் விரைவில்அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top