பெற்ற குழந்தையை கொலை செய்து கழிவறையில் வீசிய
தாய்!
சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு
வருகை தந்தபோது அம்பலம்
நிட்டம்புவ-வதுபிடிவலவில் பிறந்த
குழந்தையை கொலை
செய்து மலசலகூட
குழியில்வீசிய பெண் ஒருவரை பொலிஸார் கைது
செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது
தொடர்பாக மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வதுபிடிவல
வைத்தியசாலையில் நேற்று) 24 வயதுடைய பெண் ஒருவர்
சுகயீனம் காரணமாகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.வைத்திய பரிசோதனையில்
குறித்த பெண்,
குழந்தை ஒன்றைபிரசவித்தமை
கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
பொலிஸாரிற்குதெரிவித்துள்ளன.
இதனால்
பொலிஸார் பெண்ணிடம்
குழந்தை தொடர்பாக
விசாரணை செய்தபோது
குழந்தை கொலைசெய்யப்பட்டு
மலசலகூட குழியில்
வீசப்பட்ட விடயம்
தெரியவந்ததாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
குறித்த
பெண் கொடுத்த
தகவலின் அடிப்படையில்
குழந்தையின் சடலத்தை மலசலகூடகுழியில் இருந்து மீட்டுள்ளதாக
வதுபிட்டிவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன்
தொடர்புடைய பெண் வதுப்பிட்டிவல வைத்திய சாலையில்
பொலிஸ்பாதுகாப்பில் சிகிச்சை பெற்றுவருவதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலசல
கூடத்தில் இருந்து
மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
இந்த
சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை வதுபிட்டிவல பொலிஸார்
மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.