ஈராக்கில் தாக்குதல்

37 பேர் பலி; 62 பேர் காயம்

ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்தில், .எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 37 பேர் பலியாயினர்; 62 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக், சிரியா நாடுகளை ஆக்கிரமித்து, தனி நாடு நடத்தி வரும் .எஸ்., பயங்கரவாதிகள், அந்நாடுகளில் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 186 பேர் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, ஈராக்கின் பலாட் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்தில், .எஸ்., பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். உடலில் வெடிகுண்டுகளுடனும், துப்பாக்கி ஏந்தியும் வந்த பயங்கரவாதிகளில் ஒருவன், முதலில், அங்கிருந்த காவலாளியை தாக்கினான். மற்றொரு பயங்கரவாதி, வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோர் மீது துப்பாக்கியால் சுட்டான். அதிர்ச்சி அடைந்த மக்கள், அங்கிருந்து தப்ப முயன்ற போது, தம் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 37 பேர் பலியாயினர்; 62 பேர் படுகாயமடைந்தனர்.

முஸ்லிம்களில், சன்னி மற்றும் ஷியா என்ற இரு பிரிவினர் பெருமளவில் உள்ளனர். இவர்களில், சன்னி பிரிவைச் சேர்ந்த .எஸ்., பயங்கரவாதிகள், ஷியா பிரிவு முஸ்லிம்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top