கொழும்பு துறைமுகத்தில்
ஜப்பான் போர்க்கப்பல்கள்
ஜப்பானின் ‘இனசுமா’ மற்றும் ‘சுஸூட்சுகி’ எனும் இரண்டு போர்க்கப்பல்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
நல்லெண்ண அடிப்படையிலேயே குறித்த போர்க்கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்கள், கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டன.
குறித்த கப்பல்கள் நாளை ஜப்பான் திரும்பவுள்ள நிலையில், இரு நாட்டு கடற்படைருக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்தை பகிர்ந்து, நட்புணர்வை வளர்க்கும் நோக்கில், சில பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.