முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காக பயன்படுத்தி வருகிறார்

விரைவில் கட்சி ஒன்றை பதிவுசெய்ய ஆயத்தம்
மு. கா.ஸ்தாபர்களில் ஒருவரான  சேகுஇஸ்ஸதீன் தெரிவிப்பு



முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை பதிவுசெய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபர்களில் ஒருவருமான்  சேகுஇஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஹக்கீமின் அதிருப்தியாளர்கள் தற்போது செயற்பட்டுவருகின்றனர்.
இது தனியாக முஸ்லிம்களின் அபிலாசைகளை நோக்காகக் கொண்டு இயங்கும் கட்சியாக இருக்கும்என்று சேகு இஸ்ஸதீன் புதிய கட்சி தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர் புதிய அரசியல் முன்னணியில்இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காக பயன்படுத்தி வருகிறார். முஸ்லிம்களுக்காக குறிப்பாக கிழக்கின் முஸ்லிம்களின் நலன்களை அவர் புறந்தள்ளி வருகிறார் என்றும் இஸ்ஸதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top