சாய்ந்தமருது
உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வலியுறுத்தி
நாளை ஜும்ஆ பள்ளிவாசல்களில்
விசேட துஆ பிரார்த்தனை!
கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு, உள்ளூராட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டுக்
கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை
இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசியல் அதிகாரம் உள்ளவர்களின் பூரண ஒத்துழைப்பை பெற உதவுமாறு அல்லாஹ்விடம் மன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனை நாளை
22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இங்குள்ள சகல
பள்ளிவாசல்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
அறிவிக்கப்படுகின்றது.
இதுமாத்திரமல்லாமல் நாளை உள்ளூராட்சி மன்ற விவகாரம்
தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்தில்
குத்பா பிரசங்கங்களை மேற்கொள்வதெற்கும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
,.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.