சுற்றுலா பஸ்
கவிழ்ந்து ஈரானில் 16 பேர் பலி
ஈரான்
நாட்டில், சுற்றுலாப்
பயணிகளுடன் சென்ற பஸ், மின் கோபுரத்தில்
மோதியதில், 16 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான
ஈரானில், கராஜ்
என்ற நகரிலிருந்து,
தலைநகர் டெஹ்ரானுக்கு,
சுற்றுலா பயணிகளுடன்,
பஸ் ஒன்று
நேற்று முன் தினம் வந்து கொண்டிருந்தது.
அப்போது, ஓரிடத்தில்,
பஸ் டிரைவர்,
ரயில் தண்டவாளத்தை
வேகமாக கடக்க
முயற்சித்தார்.
திடீரென
கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகிலிருந்த மின்கோபுரத்தில்
பலமாக மோதி
கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே, 16 பேர்
உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர். உலகளவில், அதிக
விபத்துகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக ஈரான்
உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.