திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில்
அப்துல்கலாமின் சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சிலை
கடலூரில் திறக்கப்பட்டு ஒரு மணி
நேரத்திலேயே பொலிஸாரால் அகற்றப்பட்டதால்
பெரும் பரபரப்பு
ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னாள்
குடியரசு தலைவர்
அப்துல் கலாமின்
முதலாம் ஆண்டு
நினைவு தினத்தையொட்டி
கடலூர் மாவட்டம்
மஞ்சக்குப்பத்தில் உள்ள குழந்தைகள்
காப்பகத்தில் அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டது.
இதனை பார்வையற்றோர்
பள்ளியை சேர்ந்த
மாணவர்கள் திறந்து
வைத்தனர்.
இதனிடையே
சிலை திறந்து
ஒரு மணி
நேரமே ஆன
நிலையில் , உரிய அனுமதியில்லாமல் சிலைவைத்தாக கூறி அப்துல்கலாம் சிலையை பொலிஸார் அகற்றும்படி கூறினர். இதையடுத்து இளைஞர்கள் அச்சிலையை அகற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.