டாக்டர் ஜாகிர் நாயக்கின் உதவியாளர்
அர்ஷித் குரேஷி கைது!
டாக்டர் ஜாகிர் நாயக்கின் உதவியாளர் அர்ஷித் குரேஷியை நேற்றிரவு மும்பையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரளா பொலிஸாரும், மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படையினரும் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து அவர் உடனடியாக மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அர்ஷித்தை 4 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முதலில் இவரிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
அதன் பிறகு விசாரணைக்காக கேரளா அழைத்துச் செல்லப்பட உள்ளார். சமீபத்தில் கேரளாவில் மாயமான இளைஞர்களை அர்ஷித் தான் ஐஎஸ் அமைப்பில் சேர்த்து விட்டதாக இவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.