லண்டனில் டாக்ஸியில் பயணம் செய்த
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன!
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிரிட்டன் விஜயம்
செய்திருந்த போது வாடகை டாக்ஸியில் பயணங்களை
மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட
தேவை ஒன்றுக்காக
அண்மையில் ஜனாதிபதி
பிரிட்டனுக்கு பயணம் செய்திருந்தார். அதாவது மகளின்
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இவ்வாறு லண்டன்
சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த
பயணத்தின் போது
அரசாங்கப் பணத்தையோ
ஜனாதிபதி வரப்பிரசாதங்களையோ
பயன்படுத்தவில்லை. இந்தப் பயணத்திற்கு
அரசாங்கப் பணத்தைப்
பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு
பணிப்புரை விடுத்துள்ளார்.
வாடகைக்கு
அமர்த்திய டாக்ஸி
ஒன்றில் ஜனாதிபதி
லண்டனில் பயணங்களை
மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின்
முக்கிய வர்த்தக
நிலையங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, தாம் கொள்வனவு
செய்த பொருட்களை
எடுத்துக் கொண்டு
வரிசையில் நின்று
அதற்கான கொடுப்பனவுகளை
செலுத்தியுள்ளார்.
டாக்ஸியில்
செல்வதற்காக நடந்து சென்ற போது இலங்கையர்களை
சந்தித்துள்ளார் என லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த
விடயங்களை கேள்விபட்ட
ஆளும் கட்சியின்
சிரேஸ்ட தலைவர்கள்
நாட்டின் சிரேஸ்ட
தலைவர்கள் இருவருமே
சொந்த தேவைகளுக்கு
அரச சொத்துக்களைப்
பயன்படுத்தாமை மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்பட
வேண்டுமென கூறியதாக
வார இறுதி
பத்திரிகையொன்றின் அரசியல் பத்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.