திகாமடுல்ல மாவட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிக்கு அன்று பாடுபட்டவர்
அகில இலங்கை மக்கள்
காங்கிஸில் இன்று இணைந்து கொண்டார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் ரிஸ்வி சின்னலெப்பை அவர்களுடன் இணைந்து செயலாற்றியவ்ரும் கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட்டவர்களில் ஒருவருமான ஏ. ஹிபத்துல் கரீம், அகில இலங்கை மக்கள் காங்கிஸில் இன்று இணைந்து கொண்டார்.
வர்த்தக, கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் அவர் அக்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் விடுத்த அழைப்பையேற்று சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதற்கே தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதாக ஏ. ஹிபத்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருத்துக்கு தனியான பிரதேச செயலகத்தை உருவாக்குவதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் ரிஸ்வி சின்னலெப்பை அவர்களுடன் இணைந்து இவரும் பெரும் பங்காற்றியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.