வடமாகாண மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம்



அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார்.
போரினால் இடம்பெயர்ந்த, சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, ரிசாத் பதியுதீன் தலைமையில், அமைச்சர் பைசர் முஸ்தபாவை உள்ளடக்கிய செயலணி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது.
இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாணத்தில் உள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள எல்லைக் கிராமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய, ரிசாத் பதியுதீன் தலைமையில் இருந்த இந்த மீள்குடியேற்றச் செயலணி நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக ஜனாதிபதியால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க, டி.எம்.சுவாமிநாதன் ஆகிய நான்கு அமைச்சர்கள் இணைத்தலைவர்களாக பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top