ஜப்பானில்
மர்மநபர் நடத்திய ‛கத்தி' தாக்குதல்;
19 பேர் பலி 25 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்
ஜப்பானில்
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மர்மநபர்
கத்தியை கொண்டு
தாக்கியதில் 19 பேர் பலியாயினர். 25 க்கும் மேற்பட்டோர்
பலத்த காயமடைந்தனர்.
ஜப்பான்
நாட்டில் டோக்கியோ
நகருக்கு அருகிலுள்ள
சகமிஹரா நகரிலுள்ள
மாற்றுத் திறனாளிகளுக்கான
இல்லத்தில் புகுந்த மர்மநபர், கையில் வைத்திருந்த
கத்தியைக் கொண்டு
வெறித்தனமாக தாக்கினார். இச்சம்பவத்தில்
19 பேர் பலியாயினர்.
25 க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். கத்தியால் தாக்கிய 26 வயது நிரம்பிய
நபரை கைது
செய்த பொலிஸார் அவனிடம் தீவிர
விசாரணை நடத்தி
வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவன்
அங்கு பணியாற்றிய
முன்னாள் ஊழியர்
எனத் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.