பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில்
7 பேர் பலி; 33பேர் படுகாயம்
இந்தியாவில் கிருஷ்ணகிரி அருகே தனியார் பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பஸ்ஸில் இருந்த 7 பயணிகள் பலியாகினர். 33பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே, ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது பிற்பகல்.2.30 மணியளவில் சூளகிரி அருகே வளைவில் அதிவேகமாக திரும்பிய லாரி எதிரே வந்த தனியார் பஸ் மீது பலமாக மோதியது. இதில் பஸ்ஸில் இருந்தவர்களில் ஒரு பெண் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்தில் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சூளகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளன. பஸ்ஸின் பெரும்பாலன பகுதிகள் சேதமடைந்துள்ளதால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு எதிரே வந்த பஸ் மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் தருமபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.