அப்துல் கலாமுக்கு சிலை எழுப்புவது குறித்து
இந்திய
ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு எதிர்ப்பு
மறைந்த
முன்னாள் இந்திய
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பேய்க்கரும்பு
நினைவிடத்தில் சிலை எழுப்பும் பணி நடைபெற்று
வருகிறது. ஆனால்
சிலை எழுப்பக்
கூடாது என்று
இந்திய ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிலை
எழுப்புவது முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது
என்று ஜம்இய்யத்துல்
உலமா கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது
குறித்து ஜம்இய்யத்துல்
உலமா கவுன்சில்
உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்த பிறகு
செய்தியாளர்களிடம் பேசிய உலமா தலைவர்
வலியுல்லா நூரி
கூறும்போது, “இஸ்லாம் விக்கிரக ஆராதனைக்கும், தனிநபர்
வழிபாட்டுக்கும் அனுமதியளிக்காது. கலாமுக்கு
மரியாதை செய்வதென்பது
அவரது உபதேசங்களின்
படி நடப்பதாகும்.
வலுவான, வளர்ந்த
இந்தியா என்ற
அவரது லட்சியத்தை
நிறைவேற்றுவதும், இளைஞர்கள் உச்சத்தை எட்ட கனவு
காணவேண்டும் என்று கூறியுளார், இதனை நிறைவேற்றுவதும்தான்
கலாமுக்கு நாம்
செய்யும் மரியாதை”
என்றும் தெரிவித்துள்ளார்.
கலாமின்
வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக, இதன் மூலம்
இளைஞர்கள் அவரிடமிருந்து
ஊக்கம் பெற
நினைவு மண்டபம்,
ஆடிட்டோரியம், அறிவுமையம் அல்லது மியூசியம் அமைப்பதே
சிறந்தது. அதிகாரிகள்
சிலை அமைப்பதை
தவிர்ப்பது நல்லது என்று கவுன்சிலின் செயலர்
எம்.அப்துல்
ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தங்களது
இந்தக் கருத்தை
கலாம் குடும்பத்தினருக்கு
தெரிவித்துள்ளதாகவும், ஆனாலும் ஜூலை
27-ம் திகதி கலாம் சிலை திறப்பின் போது
தாங்கள் எந்தவித
இடையூறுமோ, ஆர்பாட்டமோ நடத்த மாட்டோம் என்றும்
ஜம்இய்யத்துல் உலமா உறுதியளித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.