சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்
9 ஐ.நா பாதுகாப்பு வீரர்கள் உட்பட 13 பேர் பலி
சோமாலியா
தலைநகர் மொகதிசுவில்
உள்ள சர்வதேச
விமான நிலையம்
அருகே இரண்டு
தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன.
தொடர்ந்து
அப்பகுதியில் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டதாக அங்கிருந்து
வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன. ஒரு தாக்குதல் விமான நிலையத்தின்
வாயில் அருகில்
சோதனைச்சாவடி பகுதியில் நடத்தப்பட்டது. மற்றொன்று விமான
நிலையத்திற்கு சற்று தள்ளி நடந்ததாகவும் அதிகாரி
ஒருவர் கூறியுள்ளார்.
இந்த
சம்பவத்தை தொடர்ந்து
அம்புலஸுசும் விரைந்து சென்றதாக,
சம்பவத்தை நேரில்
பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்
குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் ஐ.நா., பாதுகாப்பு
வீரர்கள் எனவும்,
3 பேர் பொது
மக்கள் எனவும்
அதிகாரி ஒருவர்
கூறியுள்ளார்.
இந்த தாக்குதல்
சம்பவத்திற்கு அல் சபாப் என்ற பயங்கரவாத
அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அந்த
அமைப்பு கூறியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.