மாயமான இந்திய போர் விமானம்
செயற்கைகோள் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
சென்னை தாம்பரத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் திடீரென மாயமானது. காணாமல் போன விமானத்தை தேடும்
பணி 3வது நாளாக இன்றும்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரேடார் செயற்கைகோள் உதவியுடன் விமானத்தை தேடும்
பணியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது.
விமானத்தை தேடும் பணியில் ஏற்கனவே 13 கப்பல்களும், 5 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில்,
தற்போது இஸ்ரோவும் தேடுதல்
பணியில் இறங்கி உள்ளது. செயற்கைகோள் மூலம் இரவு மற்றும் பகலிலும் படங்களை எடுக்க
முடியும் என்பதால் விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டறிய உள்ளதாக இஸ்ரோ
தெரிவித்துள்ளது. இந்த ரேடாரில் உள்ள மைக்ரோ அலைகள் மேகங்களையும் ஊடுருவி படம்
எடுக்கும் திறன் கொண்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செயற்கைகோள் உதவியுடன்
விமானத்தின் சிக்னல் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.