சிரியாவில் 11 வயது சிறுவன் தலை துண்டிப்பு

சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனின் தலையை துண்டித்து அவர்கள் படுகொலையும் செய்துள்ளனர்.

இந்த படுகொலையை அவர்கள் வீடியோ படமாக எடுத்து வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். இந்த சம்பவம் அலெப்போ நகருக்கு வடக்கே உள்ள ஹேண்டராத் என்ற இடத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் அப்துல்லா இஸா என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top