சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை விவகாரம்
வாக்குறுதி நிறைவேற்றப்படாததால்
இறைவனிடம் கையேந்திய மக்கள்
கடந்த பொதுத் தேர்தலின் போது முஸ்லீம் காங்கிரஸ் பிரதமரை கல்முனைக்கு
அழைத்துவந்து அவரது வாயால் "சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித்
தரப்படும்" என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், ஆண்டுகள் கடந்து வருகிறதே
தவிர, இதற்கான முஸ்தீபுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என கவலை தெரிவித்து மக்கள் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இறைவனிடம் முறையீடு செய்து கையேந்தி மன்றாடும்
விதத்திலான விசேட துஆ பிரார்த்தனை செய்துள்ளனர்.
சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் இதற்கான துஆப்
பிரார்த்தனை செய்யப்பட வேண்டுமென்ற பெரிய பள்ளிவாசல்
நிருவாகத்தினரின் தீர்மானத்துக்கமைய இன்று ஜும்ஆப் பள்ளிவாசலில்
ஜும் ஆத் தொழுகையின் பின்னர் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்தும் இந்நிகழ்வு
இடம்பெற்றது.
உள்ளூராட்சி
மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை
பிரயோகிக்கும் விதத்தில் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டன
தொழுகை
முடிவடைந்தவுடன் இறைவனிடம் கையேந்தி முறையீடு செய்து மன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.