ஒரே தேசிய பாடசாலையில் 10 வருட ஆசிரிய சேவை

இடமாற்றும் நடவடிக்கை ஸ்தம்பிதம்


ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கும் அதிகமாக சேவையாற்றி வரும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் புதிய புள்ளிவிபர தரவுகள் தெரிவித்துள்ளன.
நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் கடமையாற்றும் ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் காணப்படுவதாகவும் இதில் நான்கில் ஒரு வீதமானோர் 10 வருடமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றி வருவதாகவும்  அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவை புரியும் ஆசிரியர்களை மாற்றுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்வதற்கு முன்னர் 2008-20 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் படி தகுதியான ஆசிரியர் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதனூடாகவே இந்த இடமாற்றம் குறித்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இடம்பெறாமல் வழங்கப்படும் இடமாற்றங்கள் சாத்தியமற்றதாக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top