இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் திகதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திமுடித்துள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இந்தத் தேர்தலில் 98.21 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதில், பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 516 வாக்குகள் பெற்று வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். அதாவது 244 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 11 வாக்குகள் இதில் செல்லாதவை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கைய நாயுடு பதவியேற்க உள்ளார்.
தனக்கு ஆதரவளித்த பிரதமர் மற்றும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு, குடியரசு தலைவரின் கரத்தை வலுப்படுத்த படுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment