ஒக். 07 - 12வரை ஆசிரியர் மீண்டும் பகிஷ்கரிப்பு
கல்வி பாதிப்புக்கு அமைச்சரே பொறுப்பு
ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு
அதிபர்,
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி
மீண்டும் எதிர்வரும்
ஒக். 07ஆம்
திகதி முதல்
12ஆம் திகதிவரை
தொடர் வேலைநிறுத்தத்தில்
களமிறங்கப்போவதாகவும் இதனால் மாணவர்களின்
கல்விக்கு ஏற்படும்
இழப்பை கல்வி
அமைச்சரே பொறுப்பேற்க
வேண்டுமென்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்
ஜோசப் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
கடந்த
இரு தினங்களாக
அதிபர்களும் ஆசிரியர்களும் மேற்கொண்ட சுகயீன விடுமுறைப்
போராட்டம் வெற்றியளித்திருப்பதாகவும்
அவர் சுட்டிக்காட்டினார். செப்டம்பர்
26,27ஆகிய இரு
நாட்களும் அதிபர்களும்
ஆசிரியர்களும் சுசுகயீன விடுமுறைப் போராட்டத்தை
முன்னெடுக்கவிருப்பதாக கல்வியமைச்சருக்கு நாம் எழுத்துமூலம் அறிவித்திருந்தபோதும் அவர் அது தொடர்பில் எமக்கு
எவ்வித பதிலையும்
அனுப்பவில்லை. ஆகக்குறைந்தது கடிதம் கிடைத்தது என்பதைக்கூட
தெரியப்படுத்தவில்லை.
அதன்
காரணமாகவே நாம்
திட்டமிட்டதுபோல் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம் என்றும்
அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.