ஜனாதிபதி வேட்பாளராக
சஜித் நியமிக்கப்படுவது உறுதி
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்ட யோசனையை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (26) பிற்பகல் 3.00 மணி அளவில் கூடவுள்ளது.
சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், பின்னர் குறித்த யோசனை ஐக்கிய தேசிய முன்னணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை சில நிபந்தனைகளின் கீழ் நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், தான் எவ்வித நிபந்தனைகளுக்கும் அடி பணிய போவதில்லை என பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (25) தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.