மாளிகைக்காட்டுத் துறையில் இருந்து
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள்
மூன்று நாளாகியும் வீடு திரும்பவில்லை
மாளிகைக்காட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற
ஆழ்கடல் இயந்திரப் படகு
இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் கவலை
தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த
சீனி முஹம்மது ஜுனைதீன் (வயது 36), இஸ்மா
லெப்பை ஹரீஸ் (வயது
37 ) , காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிறிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய
மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
காணாமல் போன
மீனவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை ஆகியோருக்கு அறிவித்துள்ளதுடன் மீனவ
சங்கங்களைச் சேர்ந்த மீனவர்களும் கடலில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கு தேடுதல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.